Publish Date: Sat, 13 Jan 2018 (18:55 IST)
Updated Date: Sat, 13 Jan 2018 (19:01 IST)
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.59 என்ற புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அதன் பிளான்களில் மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை வீழ்த்த புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.59க்கு 500 எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதன் செல்லுபடி காலம் 27 நாட்கள். தற்போது கொல்கத்தா வட்டாரத்தில் வழங்கப்பட்டு வரும் இந்த பிளான், விரைவில் பிற வட்டாரங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.