Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5ஜி சேவை: அடிக்கல் நாட்டிய நோக்கியா!!

5ஜி சேவை: அடிக்கல் நாட்டிய நோக்கியா!!
, வெள்ளி, 1 டிசம்பர் 2017 (17:47 IST)
பெங்களூருவில் அமைந்துள்ள நோக்கியா ஆய்வு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு அதனை கர்நாடக மாரில மந்திரி பிரியண்க் கார்ஜ் திறந்து வைத்தார். 
 
தற்போது சுமார் 6000 பொறியாளர்கள் பணியாற்றி வரும் அந்த ஆய்வு மையத்தில் ஊழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கிளவுட், பிக் டேட்டா அனாலடிக்ஸ், வோல்ட்இ மற்றும் செயலிகள் சார்ந்த பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. 
 
இதை விட மிக முக்கியமாக 5ஜி தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. நோக்கியா நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை சோதனை செய்வது தொடர்பாக ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
நோக்கியாவின் இந்த சில புதிய திட்டங்கள் இந்திய வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. தகவல்களின் படி 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படும் போது பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் நொடிக்கு 5.7 ஜிபி என்ற வேகத்தில் தரவுகளை டவுன்லோடு செய்ய முடியுமாம். 
 
மேலும், நோக்கியாவின் இந்த முயற்சி, மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் விடப்படும் போது டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ள நோக்கியாவின் திட்டங்கள் உதவுமாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்? தினகரனின் திட்டம்