Publish Date: Mon, 20 Nov 2017 (14:06 IST)
Updated Date: Mon, 20 Nov 2017 (14:07 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குவால்கம் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்சனுடன் இணைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றன.
ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் இதர சேவைகளை எரிக்சன் நிறுவனம் வழங்கி வந்துள்ளது. தற்போது அடுத்த தலைமுறைக்கு 5ஜி சேவையை ஜியோ நிறுவனத்தை விட முன்னதாக வழங்க வேண்டும் என்ற முனைப்பில் ஏர்டெல் செயல்பட்டு வருகிறதாம்.
அதேபோல், நோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என செய்திகள் வெளியாகின.
5ஜி மொபைல் பிராட் பேண்ட் சேவை மையத்தை சென்னையில் துவங்கவுள்ளதாக நோக்கியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.