Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு – லிங்க் உள்ளே…

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (08:41 IST)
ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு சி பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் பணிகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் ரூபாய் நோட்டு அச்சடித்தல் மற்றும் புழக்கம் ஆகியவற்றையும் ரிசர்வ் வங்கியே மேற்கொண்டு வருகிறது.  இந்த ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுகின்றன.

தற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 63 கிரேடு சி காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை  அனுப்ப கடைசி தேதியாக ஜனவரி 8 ஆகும்.

வணிகவியல், பொருளாதாரம்,புள்ளியல், நிதியியல் மற்றும் பொருளாதாரக் கணிதம் ஆகிய பிரிவுகளில் முதுலைப்பட்டம் பெற்ற 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பட்டியலினத்தவர்களுக்கு 100 ரூபாயும்  மற்ற பிரிவினர்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மற்ற விவரங்கள் கீழே உள்ள லிங்கில்.
https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3613

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments