ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு – லிங்க் உள்ளே…

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (08:41 IST)
ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு சி பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் பணிகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் ரூபாய் நோட்டு அச்சடித்தல் மற்றும் புழக்கம் ஆகியவற்றையும் ரிசர்வ் வங்கியே மேற்கொண்டு வருகிறது.  இந்த ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுகின்றன.

தற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 63 கிரேடு சி காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை  அனுப்ப கடைசி தேதியாக ஜனவரி 8 ஆகும்.

வணிகவியல், பொருளாதாரம்,புள்ளியல், நிதியியல் மற்றும் பொருளாதாரக் கணிதம் ஆகிய பிரிவுகளில் முதுலைப்பட்டம் பெற்ற 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பட்டியலினத்தவர்களுக்கு 100 ரூபாயும்  மற்ற பிரிவினர்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மற்ற விவரங்கள் கீழே உள்ள லிங்கில்.
https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3613

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments