Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி மரணம்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (08:34 IST)
கர்நாடகாவில் 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி வயது மூப்பினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுலகிட்டி நரசம்மா(98). 1920ம் ஆண்டு பிறந்த இவர் தனது வாழ்நாளில் 15 ஆயிரம் பெண்களுக்கு மேல் பிரசவம் பார்த்துள்ளார். இதனை தனது பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக அவர் கூறுவார். பிரசவம் பார்ப்பதற்கு இவர் கட்டணம் ஏதும் பெறுவதில்லை. இவரின் சேவையை கவுரவிக்கும் விதத்தில் நரசம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வயது மூப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments