Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை சவரன் ரூ.50,000 வரை உயரும்: நகை வியாபாரிகள் கணிப்பு..!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (10:00 IST)
தங்கம் விலை தற்போது சவரனுக்கு 45 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை எட்டும் என நகை வியாபாரிகள் கணித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்து சில நாட்களாக மிக வேகமாக உயர்ந்து வருகிறது என்பதும் மார்ச் 9ஆம் தேதி 5150 என்று இருந்த தங்கத்தின் விலை தற்போது 5550 என உயர்ந்துள்ளது என்பதும் இன்னும் ஒரு சில பாரங்களில் 6 ஆயிரம் வரை தங்கம் விலை வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவால் ஆனதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதாகவும் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் தங்கத்தின் மீதான வரிகள் உயர்ந்துள்ளதும் காரணம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
எனவே தங்கம் விலை உயர்ந்து விட்டது என்றாலும் கூட இப்பொழுது கூட தங்கத்தில் முதலீடு செய்தால் இன்னும் ஒரு சில வாரங்களில் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments