Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPSC தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது புதிய அட்டவணை!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (09:56 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி இதுவரை வெளியாகாத தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
tnpsc

அதன்படி, குரூப் 2, 2ஏ பிரிவில் 5,446 காலிப் பணியிடங்களுக்காக நடந்த முதன்மை தேர்வின் முடிவுகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

குரூப் 4 பிரிவில் 7,301 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும்.

குரூப் 1 பிரிவில் 95 காலி பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல்நிலைத்தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையின் கீழ் உதவி மருத்துவர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்றும், புள்ளியியல் சேவைத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு சுகாதார சேவௌத்துறை, வனப்பயிற்சியாளர் உள்ளிட்ட பல அரசு வேலைகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments