Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற நேரம் எது தெரியுமா...?

Advertiesment
தீபாவளி
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி பண்டிகை, அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பலவகை இனிப்புகளோடு, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவது தொன்றுதொட்டு  வரும் சம்பிரதாய வழக்கம்.
தீபாவளி அன்று சூரிய உதயத்துக்கு முன்பாக, அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
 
தீபாவளி விடியற்காலை எண்ணெய்க் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள். 'வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும். 
கங்கா ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற நேரம்: 
 
ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 10-ம் தேதி (27-10-2019) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில்  அதிகாலை 4:30 மணிக்குமேல் 6:00 மணிக்குள் தைல ஸ்நானம், கங்கா ஸ்நானம் செய்து கொள்ள உத்தமம்.
 
காலை 7:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் சுக்ர ஹோரையில் தீபாவளி பண்டிகை புத்தாடை உடுத்துதல் சுபம். அதே தினத்தில் ஸர்வ அமாவாசை கேதார கெளரி விரத பூஜையும், மாலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் குரு ஹோரையில் லட்சுமி குபேர பூஜையும் செய்ய  உத்தமம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெங்கு வருவதற்கான அறிகுறிகளும் ஆபத்துக்களும்!!