Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலக்கு வைத்த தென் ஆப்பிரிக்கா – முறியடிக்குமா இந்தியா

இலக்கு வைத்த தென் ஆப்பிரிக்கா – முறியடிக்குமா இந்தியா
, புதன், 5 ஜூன் 2019 (19:16 IST)
இன்று நடந்துவரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவருக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

தம் கட்டி அடித்தாலும் இந்தியாவின் வலிமையான பந்துவீச்சை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. வேகபந்து வீச்சாளரான யுவேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் புவனேஷ்வர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணியில் சின்ன பின்னடைவு ஏற்பட்டாலும் கடைசியாக களம் இறங்கிய க்ரிஸ் மோரிஸ், ரபாடா சிறப்பாக விளையாடினர். கடைசி ஓவரில் களமிறங்கிய இம்ரான் தாஹிர் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட் இழந்தார்.

50 ஓவரின் முடிவில் 227 ரன் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா 228 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக கொடுத்திருக்கிறது. இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது இந்தியா விளையாட துவங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்