Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து: முதல்முறையாக கோப்பையை வெல்வது யார்?

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து: முதல்முறையாக கோப்பையை வெல்வது யார்?
, வியாழன், 11 ஜூலை 2019 (21:43 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும், உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இரு அணிகளில் எந்த அணி இறுதிப்போட்டிய்ல் வெற்றி பெற்றாலும் அந்த அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது., பின்னர் 224 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி  32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஞாயிறு அன்று நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து இறுதி போட்டியில் மோதவுள்ளது
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 223/10  49 ஓவர்கள்
 
ஸ்மித்: 85
கார்ரே: 46
ஸ்டார்க்: 29
மாக்ஸ்வெல்: 22
 
இங்கிலாந்து: 
 
ஜேஜே ராய்: 85
ரூட்: 49
மார்கன்:45
பெயர்ஸ்டோ: 34
 
ஆட்டநாயகன்: ஜேஜே ராய்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணிடம் அத்துமீறிய கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு விளையாட தடை !