Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி இந்திய அணிக்கு 3 கேப்டன்கள்…அதிரடி முடிவு எடுத்த பிசிசிஐ

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (17:06 IST)
இனி இந்திய அணிக்கு, 3 கேப்டன்களை நியமிக்க இருப்பதாக, பிசிசிஐ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்துடன் மோதிய இந்திய அணி, மிகவும் கடுமையான தோல்வியை அடைந்தது. இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

இந்த மனக்கசப்பைத் தொடர்ந்து விராட் கோலி, தனது கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. மேலும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது பிசிசிஐ, ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது, இனி ஒரு நாள் போட்டிகளுக்கும், 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை போட்டிகளுக்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாகவும் தொடர்வார்கள் என அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஹ்ரித்திக் பாண்டியா கேப்டனாக தொடரலாம் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments