Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தா அணியின் கேப்டன் மனைவியை பின் தொடர்ந்த இளைஞர்கள்

youngster
, வியாழன், 11 மே 2023 (15:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஸ் ராணாவின் மனைவி சாச்சி மர்வாவை பின் தொடர்ந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் 16 வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி, சென்னை கிங்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஸ் ராணாவின் மனைவி சாச்சி மர்வா சமீபத்தில் ஒரு வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.

அதில், அவர் சென்ற காரை  பைக்கில் வந்த சிலர் துரத்திச் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் ஏன் இவ்வாறு பின்தொடர்ந்தர் என்றறு தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை இரவு கிர்த்தி நகரில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தான் பத்திரமாக வீடு வந்ததால் இதுபற்றிப் போலீஸில் புகாரளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த  டெல்லி போலீஸார் இவ்வழக்கில் தொடர்புடைய  சைட்னயா சிவம்(18) விவேக்(18( ஆகிய இரண்டு இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25-ஐ தாண்டாமல் வென்ற முதல் டீம்! ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சிஎஸ்கே!