Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் ஐபிஎல் 2023 : டெல்லியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட் அணி வெற்றி

webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (23:40 IST)
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வரும்  நிலையில், இன்றைய போட்டியில், டெல்லியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆண்டுமுதல் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் குஜரராத் ஜெயிண்ட் அணி பேட்டிங் செய்தது.

20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் லாரா வோல்வார்ட் 57 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 51 ரன்களும் எடுத்தனர்.

எனவே 148 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது.

இதில்,தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  இருப்பினும் மாரிசான் 36 ரன்களும், அருந்ததி 25 ரன்களும் எடுத்தனர். 18.4 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளும் இழந்து டெல்லி அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

குஜராத் ஜெயண்ட் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் தனுஷா மற்றும் ஆஷ்மி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஐபிஎல்: டெல்லிக்கு எளிய இலக்கு கொடுத்த குஜராத்..!