Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் T20: முதல் முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (11:07 IST)
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா நுழைந்துள்ளது. 
 
மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. 
 
இந்த போட்டியில் இரு அணிகளும் விளையாட தயார் நிலையில் உள்ள நிலையில் திடீரென கனமழை பெய்ததால் போட்டு துவங்குவதில் தாமதமானது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. 
 
அங்கு மழை குறையாததால்  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி கைவிடப்பட்டுள்ளது. மேலும், குரூப் ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதால் நேரடியாக இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 
 
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments