Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

vinoth
வியாழன், 10 ஜூலை 2025 (08:25 IST)
தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் வியான் முல்டர் முச்சதம் அடித்துக் கலக்கியுள்ளார். முதல் இன்னிங்ஸில் பேட் செய்த அவர் 334 பந்துகளில் 367 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்களான லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிக்ளேர் செய்து அதிர்ச்சியைக் கொடுத்தார்.

இதுபற்றி பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்த அவர் “நாங்கள் போதுமான ரன்களை சேர்த்துவிட்டதாக நினைத்தோம். பிரையன் லாரா ஒரு லெஜண்ட் வீரர். அதனால் அதுவே உண்மையான சாதனையாக இருக்கட்டும். எனக்கு இன்னொரு முறை அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் கூட நான் இந்த முடிவையே மீண்டும் எடுப்பேன். லெஜண்ட்களே அதுபோல பெரிய ஸ்கோர்களை பெற்றிருக்க வேண்டும்” என தன்னடகத்துடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் முல்டரின் முடிவு தவறானது என கிறிஸ் கெயல் பேசியுள்ளார். அதில் “வாழ்நாளில் எப்போதாவதுதான் இது போன்ற வாய்ப்புகள் வரும். அதனால் டிக்ளேர் செய்தது அணியின் தவறு” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

இன்று தொடங்குகிறது லார்ட்ஸ் டெஸ்ட்… பும்ரா & ஆர்ச்சர் மோதல்!

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments