Publish Date: Thu, 24 Nov 2016 (11:51 IST)
Updated Date: Thu, 24 Nov 2016 (11:57 IST)
பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடியுள்ள ஐந்து வயது சிறுவனின் ஆட்டம் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
14 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் களமிறங்கி ஆடிய ருத்ரா
ருத்ரா என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுவன் பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான போட்டி எனச் சொல்லப்படுகிறது.
மேலும் அதில் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஸ்டம்ப் உயரமே அந்த சிறுவனின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது இது இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.