Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“க்ரவுண்டுக்கு வா.. உன்ன அடிச்சு ஓட விடுறேன்” – சேவாக்கை மிரட்டிய இந்திய வீரர்கள்!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (08:56 IST)
ஐபிஎல் போட்டிகளில் 13வது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் தனது பழைய அனுபவங்களை முன்னாள் வீரர் சேவாக் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கங்குலி, சச்சின், சேவாக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பல அணிகளில் இருந்தும் விளையாடினர். இந்த ஆண்டும் ஐபிஎல்லின் 13வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. தற்போது என்னதான் புதிய வீரர்கள் பலர் விளையாடி வந்தாலும் முன்னாள் வீரர்கள் அளித்த போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முதலில் ஐபிஎல் விளையாடத் தொடங்கியபோது நடந்த சம்பவங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பகிர்ந்துள்ளார். “ஜஹீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் எனது நெருங்கிய நண்பர்கள். இந்திய அணிக்காக ஒன்றாக பல தொடர்களில் விளையாடி இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் வேறுவேறு அணிகளுக்காக விளையாடினோம். அப்போது நெட் ப்ராக்டிசின்போது “க்ரவுண்டுக்கு வா உன்ன அடிச்சு ஓட விடுறேன்” என விளையாட்டாக பேசிக் கொள்வோம்” என தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments