Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

Advertiesment
கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

vinoth

, செவ்வாய், 7 ஜனவரி 2025 (09:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றினார்.

கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் இந்த சீரிஸ் முழுவதும் அதிகமுறை அவுட் ஆகி  வெளியேறினார். ஆனால் அந்த பந்துகளை விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் கோலி ஆஸி வீரர்களிடமும் ரசிகர்களிடம் ஆக்ரோஷமான மோதல்களில் ஈடுபட்டார். இது குறித்து பேசியுள்ள கோலியின் நெருங்கிய நண்பர் டிவில்லியர்ஸ் “கோலி சண்டை போடுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர் தன் வாழ்வின் மோசமான ஃபார்மில் இருக்கும்போது இப்போது இதெல்லாம் தேவையில்லாதது எனத் தோன்றுகிறது. அவர் இப்போது இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் சர்மா ஸ்டாண்ட் ஆப் காமெடியனா போகலாம்! - ஆஸி முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!