இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி! – ருதுராஜ் கேப்பிடன்சி அபாரம்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (09:39 IST)
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் பிரிவில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.



சீனாவின் பெய்ஜிங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இதில் விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என இதுவரை 83 பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெற்றுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி பங்களாதேஷை 96 ரன்களில் மடக்கியது.

பின்னர் பேட்டிங்கில் இறங்கிய இந்திய அணி 9வது ஓவரிலேயே 97 ரன்களை குவித்து வெற்றியை ஈட்டியது. ஜெய்ஸ்வால் ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களையும், திலக் வர்மா 55 ரன்களையும் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments