Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்.. இந்திய அணியில் நடக்கும் மாற்றம்! – மாற்று வீரர் யார்?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (09:06 IST)
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கி நடந்து வருகின்றன. 10 அணிகளுக்கு இடையே இந்தியாவில் உள்ள ஒன்பது மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் எதிர்வரும் அக்டோபர் 8ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.

இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி இருந்தார். அதுவும் முக்கியமாக இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரில் ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை அளித்தார்.

ஆனால் தற்போது டெங்குவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது கேஎல் ராகுல் இருவரில் ஒருவர் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்படலாம் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் இந்திய அணியின் விளையாட்டில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்று ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments