Publish Date: Tue, 25 May 2021 (20:28 IST)
Updated Date: Tue, 25 May 2021 (20:33 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் அனைத்துப் போட்டிகளிலும் வென்று கோப்பை சாதித்துக் காட்டினார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல்-2021 14 வதுச் சீசன் ஐபிஎல் போட்டியில் விராட் கோலி கேப்டனாக ஜொலித்தார்.
இந்நிலையில், உலகளவில் பெரும் செல்வம் கொழிக்கும் வாரியமாக பிசிசிஐ இருப்பதால் ஏராளமான சம்பளம் கொடுத்து வருகிறது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் விராட் கோலிக்கு அதிக சம்பளம் பிசிசிஐ கொடுப்பதாக பலரும் நினைத்திருந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் கோலியை விட அதிகம் சம்பளம் பெருகிறார்.
இதில், கோலி இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பிசிசிஐயின் சம்பளப் பட்டியலில் ஏ பிளஸ் கிரேட் பட்டியலில் உள்ளார். அவருக்கு ஒருவருடத்திற்கு ரூ.7 கோடி பிசிசிஐ வழங்குகிறது. இங்கிலாந்து அணியின் ஜோ ஊரூட் வருடத்திற்கு ரூ.7.22 கோடி ( 7,00,000 பவுண்ட்) சம்பளம் பெறுகிறார்.
மேலும், விளம்பரங்களின் மூலம் விராட் கோலி அதிகளவில் சம்பளம் பெரும் கோலி, ஐபிஎல் போட்டியில் விளையாட பெங்களூர் அணியிடம் ரூ.17 கோடி சம்பளம் பெருகிறார்.