Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது… தவறினால்?” – ரவி சாஸ்திரி கருத்து!

“இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது… தவறினால்?” – ரவி சாஸ்திரி கருத்து!
, திங்கள், 13 நவம்பர் 2023 (08:08 IST)
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்துள்ளன.  நேற்று நடந்த போட்டியில் நெதர்லாந்தை வெற்றி பெற்றதின் மூலம் தோல்வியே இல்லாமல் இந்திய அணி விளையாடிய அனைத்து 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன்னர் கோப்பையை வென்றது. இந்த முறை கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த முறை தவறவிட்டால் இன்னும் 3 தொடர்கள் காத்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையை இந்தியா வென்றது. 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடக்க ஆஸ்திரேலிய அணி வென்றது. 2019 –ல் இங்கிலாந்தில் நடக்க இங்கிலாந்து அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வியே இல்லாமல் இந்தியாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியும்… விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து!