Publish Date: Wed, 03 Nov 2021 (19:11 IST)
Updated Date: Wed, 03 Nov 2021 (23:23 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
.இதில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இஷான் கிஷான், வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அஷ்வின், சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியில் வென்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.