Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

vinoth
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (09:56 IST)
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியை 162 ரன்களில் கட்டுப்படுத்திய மும்பை இந்தியன்ஸ், சேஸிங்கில் 18 ஓவரில் 166 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் 11 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் கடைசி ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற இடத்தில் 16 வது ஓவரில் இருந்து மும்பை அணி ரன் கூட ஓடாமல் நின்று கொண்டே இருந்தனர்.

பந்துகள்தான் இருக்கிறதே, பவுண்டரியோ சிக்ஸரோ அடித்து முடிக்கலாம் என அவர்கள் காத்திருப்பதாக தெரிந்தது. அதேபோல 18.1வது பந்தில் ஒரு பவுண்டரியை அடித்து 166 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சி எஸ் கே அணியை பத்தாவது இடத்திலேயே நிறுத்தி வைத்தனர். சன் ரைசர்ஸ் அணி ஒன்பதாவது இடத்துக்குக் கீழிறங்கியது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஐதராபாத் அணி பேட் செய்துகொண்டிருக்கும் போது மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அபிஷேக் ஷர்மாவிடம் சென்று அவர் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு தேடினார். சில போட்டிகளுக்கு முன்னால் அபிஷேக் ஷர்மா சதமடித்த பின்னர் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து ரசிகர்களை நோக்கிக் காட்டியது கவனம் பெற்றது. அதே போல இன்றையப் போட்டியிலும் எதாவது எழுதி வைத்திருக்கிறாரா என சோதனை செய்தது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments