Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்லில் இருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்! – மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (08:45 IST)
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி இவ்வாறு தோல்வி அடைந்திருப்பது மும்பை அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

மோசமாக விளையாடி வரும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் உள்ளிட்ட சிலரே சிறப்பாக விளையாடி ஓரளவு அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி குஜராத் அணியுடன் நடந்த போட்டியில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ்  காயமடைந்தார்.

இதனால் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்தே விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை அணியின் வெற்றி மேலும் பாதிக்கப்படும் என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments