Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 போட்டிகளில் இனி இவர்தான் விக்கெட் கீப்பர்… சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

Advertiesment
டி 20 போட்டிகளில் இனி இவர்தான் விக்கெட் கீப்பர்… சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

vinoth

, புதன், 22 ஜனவரி 2025 (09:30 IST)
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர் அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த தொடர் சம்மந்தமாக பேசியுள்ள சூர்யகுமார் யாதவ் டி 20 அணியில் விக்கெட் கீப்பர் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “இப்போதைக்கு அந்த கேள்விக்கு தேவையே இல்லை. கடந்த 10 இன்னிங்ஸ்களாக சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அதனால் அவர்தான் விக்கெட் கீப்பர்” எனக் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் கடந்த 10 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை விளாசியுள்ளார்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதனால் இப்போதைக்கு ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு டி 20 அணியில் இடமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்புகள்!