Publish Date: Fri, 21 Feb 2025 (11:09 IST)
Updated Date: Fri, 21 Feb 2025 (11:18 IST)
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன. ஆனால் இறுதிகட்டத்தில் சி எஸ் கே அணியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அந்த அணியில் இருந்து விலகி, பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில் இந்த சீசனில் அவரை மீண்டும் சி எஸ் கே அணியில் கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அவரை சி எஸ் கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.