Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ராவுக்கு ஓய்வளிக்கக் கூடாது… அவர்தான் எல்லாமே- சுனில் கவாஸ்கர் கருத்து!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (08:09 IST)
அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது. அந்த அண்யின் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதமடித்தார்.

முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது. அதை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடர்ச்சியாக விளையாடிவருவதால் பும்ராவுக்கு அடுத்த டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “என்னைப் பொறுத்தவரை பும்ரா ஐந்து போட்டிகளையும் விளையாட வேண்டும். இந்த டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களில் முடிந்துவிட்டது. அதனால் அவருக்கு அதிக நாட்கள் ஓய்வெடுக்கக் கிடைத்துள்ளன. அவருக்குக் காயம் எதுவும் ஏற்படாத பட்சத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனென்றால் அவர்தான் இந்திய பந்துவீச்சின் மையமாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments