’’தோனி சென்னை கிங்ஸ் அணியில் நீடிப்பார்’’- சீனிவாசன் உறுதி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (19:43 IST)
சென்னை அணியில் தோனி தொடர்ந்து நீடிப்பாரா மாட்டாரா என்ற குழப்பத்திற்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியான பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் -14 வது சீசன் தொடர் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சென்னை கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானித்தது.

இதையடுத்து, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதி்ல், சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டு, அது முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்க்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்விழாவில் பேசிய சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், தோனி சென்னை அணியில் தொடர்ந்து நீடிப்பார் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments