Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’தோனி சென்னை கிங்ஸ் அணியில் நீடிப்பார்’’- சீனிவாசன் உறுதி

Advertiesment
Chennai Kings
, சனி, 20 நவம்பர் 2021 (19:43 IST)
சென்னை அணியில் தோனி தொடர்ந்து நீடிப்பாரா மாட்டாரா என்ற குழப்பத்திற்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியான பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் -14 வது சீசன் தொடர் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சென்னை கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானித்தது.

இதையடுத்து, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதி்ல், சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டு, அது முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்க்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்விழாவில் பேசிய சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், தோனி சென்னை அணியில் தொடர்ந்து நீடிப்பார் என உறுதியளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’எனது கடைசி டி-20 தமிழ்நாட்டில் தான் ’’- தோனி உருக்கம்