பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்த, இந்திய ராணுவமும் தற்போது பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் தரம்ஷாலா மைதானத்தில் நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பாதியிலேயேக் கைவிடப்பட்டது. எஞ்சிய ஐபிஎல் தொடரும் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்ள விமான சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது தரம்ஷாலாவில் இருக்கும் இரு அணி வீரர்கள் மற்றும் குழுவினரை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத் ரயில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.