Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஷ்வினைத் தவிர யாரும் இப்படி என்னை மடக்கியதில்லை – ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்!

அஷ்வினைத் தவிர யாரும் இப்படி என்னை மடக்கியதில்லை – ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்!
, புதன், 30 டிசம்பர் 2020 (11:24 IST)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அஷ்வினின் பவுலிங் தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பிளேயர் என்றால் அது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தான். 60 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் அவரை நவீன கால டெஸ்டின் பிராட்மேன் என வர்ணிக்கின்றனர் விமர்சகர்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதுவும் அஷ்வின் பந்தில் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார்.

இது குறித்து பேசியுள்ள ஸ்மித் ‘நான் சுழல்பந்தை ஆக்ரோஷமாக விளையாடுவேன். எனது ஆட்டத்தின் மூலம் அஷ்வினுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினேன். ஆனால் அதற்கு எதிராக நடந்துள்ளது. இரு முனைகளைக் கொண்ட கத்தியை போன்ற சவால் இது. என்னால் மீண்டும் திரும்ப முடியும் என நினைக்கிறேன். அஷ்வினை தவிர எந்தவொரு பவுலரும் இப்படி என்னை நிலைதடுமாற வைத்ததில்லை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த சாதனையை செய்யும் மூன்றாவது நபர் ஜடேஜாதான் – டிவிட்டரில் மகிழ்ச்சி!