Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி

Advertiesment
ஆஸ்திரேலியா
, புதன், 28 மார்ச் 2018 (17:18 IST)
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 100% அபராதமும், பான்கிராப்டிற்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் ஐசிசி விதித்தது.
webdunia
 
இது தொடர்பாக விசாரணை நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. 
 
இந்நிலையில்,பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழில்நுட்ப வளர்ச்சிதான் இந்த சர்ச்சைக்கு காரணம் - அஸ்வின்