Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது: கங்குலி சாடல்...

ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது: கங்குலி சாடல்...
, செவ்வாய், 27 மார்ச் 2018 (18:23 IST)
போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அனி வீரர்கள் செய்தது முட்டாள்தனம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து கங்குலி மேலும் கூறியதாவது, 1981 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்காக கடைசி பந்தை உருட்டி விட்டது முதல் ஆஸ்திரேலியா அணி இப்படித்தான்  கிரிக்கெட் விளையாடி வருகிறது.
 
2008-ல் நான் 60 ரன்களில் பேட் செய்து கொண்டிருந்த போது ரிக்கி பாண்டிங் தரையில் பட்டு வந்த பந்தை கேட்ச் பிடித்து அவுட் என்று சாதித்தார். நான் அவுட் ஆனவுடன் போட்டியின் போக்கே மாறிவிட்டது.
 
எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதுதான் இப்படி முட்டாள்தனமாக யோசிக்க தூண்டுகிறது. ஸ்மித் இதனை செய்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஸ்மித், பேங்க்ராப்ட், வார்னர் செய்தது மிகப்பெரிய முட்டாள்தனம். உண்மையில் ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது. 
 
ஸ்மித், பேங்கிராப்டுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். 6 மாதகாலம் அல்லது ஆயுள் தடை என்றெல்லாம் நான் கூற மாட்டேன், ஆனால் 2-3 போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும் என கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி: பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது