இந்திய அணி இம்மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஒரே நேரத்தில் ரோஹித், விராட் மற்றும் அஸ்வின் ஆகிய மூன்று சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் அணி இங்கிலாந்தில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் புதுக் கேப்டன் ஷுப்மன் கில் பேசும்போது “என்னுடைய ஸ்டைலில் நான் இந்திய அணியை வழிநடத்துவேன். அதே நேரத்தில் முந்தையக கேப்டன் ரோஹித் ஷர்மா போல வீரர்களை பாதுகாப்பாக உணரவைப்பேன்” எனக் கூறியுள்ளார்.