Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!

Advertiesment
இந்திய அணி

vinoth

, வெள்ளி, 20 ஜூன் 2025 (08:39 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  டெண்டுல்கர்- ஆண்டர்சன் தொடரில் விளையாடுவதற்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் இன்று தொடங்குகிறது. இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவன் என்னவாக இருக்கும்? இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முதல் போட்டிக்கு முன்பாகப் பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் “டெஸ்ட் போட்டியில் வெற்றி என்பது எதிரணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்துவதில்தான் உள்ளது. நாம் எவ்வளவு ரன்கள் அடிக்கிறோம் என்பதை எதிரணியின் விக்கெட்களை துரிதமாக வீழ்த்துவதுதான் முக்கியம். ஐபிஎல் தொடரை வெல்வதை விட இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் தொடரை வெல்வதே மிகவும் முக்கியமானதாகும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!