Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலிக்கு இந்தியாவில் விளையாடும் பேராசை இருக்கிறது…ஆனால்?- சோயிப் அக்தர் கருத்து!

Advertiesment
இந்தியா

vinoth

, வியாழன், 5 டிசம்பர் 2024 (11:27 IST)
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் பணபலம் மிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியைத் தன்பக்கம் சாய்த்தது. இதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை தவிர்க்க தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இதுகுறித்து பேசும்போது “இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் பாகிஸ்தானில் வந்து விளையாடும் பேராசை இருக்கிறது. அவர்கள் மட்டும் இங்கு வந்து  விளையாண்டால் தொலைக்காட்சி உரிமம் எல்லாம் கோடிகளில் புரளும். ஆனால் இந்திய அரசுதான், அவர்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுக்கிறது” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்ஸ்மேன்களைக் குறை சொன்னதால் நீக்கப்பட்டாரா ஹேசில்வுட்.. கவாஸ்கர் கருத்துக்கு ஆஸி முன்னாள் வீரர் பதில்!