Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை மட்டும் சீக்கிரம் வீழ்த்துங்கள்… பாக் வீரர்களுக்கு அக்தர் அறிவுரை!

vinoth
சனி, 27 செப்டம்பர் 2025 (15:25 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன் மூலம் முதல் முறையாக இரு அணிகளும் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்த தொடரில் இதுவரை தோல்வியே இல்லாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்தியா. பாகிஸ்தான் அணியை முதல் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் எளிதாக வென்றது. ஆனால் பாகிஸ்தான் அணியோ கலவையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இதனால் மனதளவிலேயே பாகிஸ்தான் பலவீனமாக உணரும். ஆனால் அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அறிவுரை ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில் “இந்திய அணியின் மீதுள்ள ஒளிவட்டத்தை மறந்து விளையாடுங்கள். அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை முதல் இரண்டு ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் இந்திய அணியின் பேட்டிங் தடுமாறும். நீங்கள் 20 ஓவர்களும் வீசவேண்டாம். விக்கெட்களை வீழ்த்துங்கள். அபிஷேக் ஷர்மா எல்லா பந்துகளையும் சரியாக் அடிப்பாரா என்ன? அவருக்கும் மிஸ் ஆகும். நிச்சயம் தவறு செய்வார்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!

இந்தியாவுக்கு போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தான்.. பாகிஸ்தான் ஒரு போட்டி அணியே இல்லை: ஹர்பஜன் சிங்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் இந்த இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவாரா?

என்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்… ஆட்டநாயகன் திலக் வர்மா பெருமிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments