Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

Advertiesment
உலக சாம்பியன்ஸ் லீக்

vinoth

, திங்கள், 21 ஜூலை 2025 (14:28 IST)
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.

இதையடுத்து இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் நடந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் பதற்றமான சூழல் உருவானது. அதன் பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்று இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தின.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்த தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக இந்திய சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான் அணியோடு விளையாட மறுத்தது. இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “விளையாட்டு என்பதே தேசங்களை இணைக்கதான். அதிலும் அரசியலை நுழைத்தால் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்? உரையாடல் இல்லாவிட்டால் எப்படி தீர்வு கிடைக்கும்? ஒரே ஒரு அழுகிய முட்டை எல்லாவற்றையும் வீணாக்கிவிடும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!