Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் எதிர்பார்த்த ஒரு பெயர் அணியில் இல்லை… சேவாக் சொல்லும் இளம் வீரர்!

நான் எதிர்பார்த்த ஒரு பெயர் அணியில் இல்லை… சேவாக் சொல்லும் இளம் வீரர்!
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (10:03 IST)
உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.

இதையடுத்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது முன்னாள் வீரர் சேவாக் “அடுத்த முறை இந்திய அணி டி 20 உலகக்கோப்பைக்கு செல்லும் போது அனைத்து சீனியர் வீரர்களையும் கழட்டிவிடவேண்டும். 2007 ஆம் ஆண்டு சென்றது பொன்ற புதிய வீரர்களைக் கொண்ட அணியை அனுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் இளம் வீரரான பிரித்வி ஷா இடம்பெறவேண்டும் என சேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  “அணியில் நான் பார்க்க விரும்பிய ஒரு பெயர் பிருத்வி ஷா. அவர் டி20 அணியிலோ, ஒருநாள் அணியிலோ இல்லை. அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர் 2023 உலகக் கோப்பைக்கான அணியில் இருப்பார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஆண்டு இந்தியாவில் யார் என்று காட்டுங்கள்… பாகிஸ்தான் அணிக்கு அக்தர் ஆதரவு!