Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ஆண்டு இந்தியாவில் யார் என்று காட்டுங்கள்… பாகிஸ்தான் அணிக்கு அக்தர் ஆதரவு!

Advertiesment
கவாஸ்கர்
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:56 IST)
பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் சிறப்பாக விளையாடியதாக சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சூப்பர் 12 லீக் சுற்றில் முதலில் மோசமாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவின் புண்ணியத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதன் பின்னர் அரையிறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.

இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் “இந்த தொடரிலேயே சிறப்பாக விளையாடிய அணி நாம்தாம். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வென்று நீங்கள் யார் என்று நிரூபியுங்கள்” என ஆதரவாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விருதுகள்! – யார் யாருக்கு தெரியுமா?