Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகிறாரா சேவாக்?

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (14:58 IST)
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அப்போதைய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா இந்திய கிரிக்கெட் அணி குறித்து பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். அது பிசிசிஐ வட்டாரத்தில் புயலைக் கிளப்பியதால் அவர் பின்னர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.

அதன் பின்னர் உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு இடைக்கால குழுவிக்கு சிவசுந்தர் தாஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். விரைவில் இந்த குழு கலைக்கப்பட்டு புதிய தேர்வுக்குழு உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புதிய தேர்வுக்குழுவுக்கு தலைவராக முன்னாள் இந்திய அணி வீரர் விரேந்திர சேவாக்குக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அவரை தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க சொல்லி பிசிசிஐ சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments