Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து இரண்டு சதம்… இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய சஞ்சு!

Advertiesment
அடுத்தடுத்து இரண்டு சதம்… இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய சஞ்சு!

vinoth

, சனி, 9 நவம்பர் 2024 (09:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில்தான் வங்கதேசத்துக்கு டி 20 போட்டியில் அவருக்கு இடம் கிடைத்து சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இனிமேல் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியிலும் அவர் சதம் அடித்து கலக்கியுள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்து 2 டி 20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவாஸ்கர் அப்படி பேசியிருக்கக் கூடாது… ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ஆஸி.வீரர்!