Publish Date: Tue, 28 Jan 2025 (13:59 IST)
Updated Date: Tue, 28 Jan 2025 (14:15 IST)
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற திலக் வர்மா, அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து டி 20 போட்டிகளில் கோலியின் இடத்தில் இறங்கி கோலி போலவே மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனியாளாக விளையாடி இந்திய அணியைக் கடைசி ஓவரில் வெற்றி பெறவைத்தார்.
இந்நிலையில் திலக் வர்மாவின் இன்னிங்ஸ் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் “திலக் வர்மாவிடம் பயமோ பதற்றமோ இல்லை. கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். தோனியிடம் இருக்கும் மன உறுதி திலக் வர்மாவிடமும் இருக்கிறது. அது என்னை பிரம்மிக்க வைக்கிறது” எனக் கூறியுள்ளார்.