Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ட் ஏலத்தில் செல்ல இதுதான் காரணம்… ஓப்பனாக பேசிய டெல்லி அணி பயிற்சியாளர்!

vinoth
புதன், 11 டிசம்பர் 2024 (08:02 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அதனால் இந்த ஆண்டு அந்த அணியில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தக்கவைக்கப் படாமல் விடுவிக்கப்பட்டார்.

இப்போது ஏலத்தில் அவர் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் ஏன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு வெளியேறினார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

அதில் “ரிஷப் பண்ட் ஏலத்தில் செல்லவேண்டும் என முடிவெடுத்தார். ஏனென்றால் ஒரு அணியால் அதிகபட்ச தொகை கொடுத்து தக்கவைக்கப்படும் 18 கோடி ரூபாய் தொகையை விட தான் அதிக தொகைக்கு ஏலத்தில் போவோம் என அவர் நம்பினார். அதே போல அவருக்கு அதிக தொகையும் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments