Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தீப் ஷர்மா அபார பவுலிங்… திலக் வர்மா அரைசதம்- மும்பை அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

சந்தீப் ஷர்மா அபார பவுலிங்… திலக் வர்மா அரைசதம்- மும்பை அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

vinoth

, திங்கள், 22 ஏப்ரல் 2024 (21:23 IST)
ஐபிஎல் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடந்து வரும் 38 ஆவது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப ஓவர்களிலேயே ரோஹித், இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுத்தனர்.

திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்களும் வதேரா 49 ரன்களு சேர்த்து அவுட் ஆகினர், அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் ஷர்மா அபாரமாக பந்துவீசி 18 ரன்கள் மட்டும் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கும் ஃபார்முக்கு 180 என்பது எளிய இலக்குதான் என்பதால் மும்பை அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IPL 2024: டாஸ் வென்ற மும்பை எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!