Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (19:32 IST)
இன்று இந்தியா-  நியூசிலாந்து  அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்துள்ளார். இது அவரது ஐம்பதாவது சதமாகும்.

இதுவரை அதிகமாக சச்சின் டெண்டுல்கர் 49 சதமடித்துள்ள நிலையில் அவரது சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். இந்த போட்டியை சச்சின் டெண்டுல்கர் நேரில் பார்க்க மைதானத்திற்கு வந்த நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த விராட் கோஹ்லிக்கு எழுந்து நின்று அவர் கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ’’டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன்முதலில் சந்தித்தபொஅது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தனர். அப்போது என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அதன்பின் விரைவில் உங்கள் ஆர்வம் மற்றும் திறமையால் என் இதயத்தைத் தொட்டீர்கள்.  அந்தச் சிறுவன் விராட் வீரராக வளர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு இந்திய வீரர் என் சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய வேறு எதுவும் இல்லை.  இந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி என்ற பெரிய அரங்கில் எனது சாதனையை  சொந்த அரங்கில் நிகழ்த்தியுள்ளது அழகு சேர்ப்பதாக’’ உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 14.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள்  எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments