Publish Date: Fri, 19 Aug 2022 (16:11 IST)
Updated Date: Fri, 19 Aug 2022 (16:14 IST)
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தன்னுடைய பழமையான நினைவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டுக்காக தனது 25 ஆண்டு கால வாழ்க்கையில் அர்ப்பனித்தவர். இந்த 25 ஆண்டுகாலத்தில் பல பேட்டிங் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக குவித்துள்ளார்.அவரின் கிரிக்கெட் காலத்தில் ரசிகர்களுக்கு பல மகிழ்ச்சிகரமான நினைவுகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தன்னுடைய நாஸ்டால்ஜியா ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் புனேவில் உள்ள ஒரு மைதானத்துக்கு சென்ற அவர் அந்த மைதானத்தில் 15 வயது பையனாக இருக்கும் போது தான் விளையாடிய போட்டியைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் “நான் இங்கு விளையாடிய போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய போது அழுதுகொண்டே பெவிலியன் திரும்பினேன்” என தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.