Publish Date: Tue, 17 Apr 2018 (13:20 IST)
Updated Date: Tue, 17 Apr 2018 (14:00 IST)
மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில், சிலரோடு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
கிரிக்கெட்டிற்காக தனது வாழ்க்கையையே அற்பணித்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் தந்தை என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், பல இன்னல்களுக்கு இடையே பல சாதனைகளை படைத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு பல இளைஞர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்தை கொடுக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இப்போது அவ்வழியாக சென்ற சச்சின், தனது காரில் இருந்து இறங்கி, அந்த ஊழியர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டு, அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு சச்சின் விடைபெற்றார்.
நன்றி: CRICKET 360