இன்று ஆஸ்திரேலியாவோடு மோதல்… ஆப்கன் வீரர்களை சந்தித்து அறிவுரை வழங்கிய சச்சின்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:54 IST)
ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு போட்டியிடும் அணிகளுள் ஒன்றாக இருப்பதால் இந்த போட்டி ஆப்கானிஸ்தானுக்கும் மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கன் அணி இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வெற்றி பெற்று  8 புள்ளிகளோடு உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் இன்று ஆஸி அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஆப்கன் அணியின் ஆலோசகர் அஜய் ஜடேஜா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்து ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு தனித்தனியாக ஆலோசனை வழங்க வைத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments